Tuesday, January 26, 2010

உலகம் உன்னை உற்றுப்பார்க்கும்....
















இளைஞனே....

சாலையோர கலைமான்களை ஈர்க்க...ஒலிப்பான்களை
ஒலித்து கொண்டு மிகத்துரிதமாக செல்கிறாய்...
நீ ஈர்ப்பது கலைமான்களை அல்ல காலனை...
உறங்கி கொண்டிருக்கும் காலனை ஒலி கொடுத்து எழுப்புகிறாய்...

உன்னை பெண்கள் உற்று பார்க்க நினைத்து உயிரை விடுகிறாய்....
உன் எண்ணங்களை செயல்படுத்த...
உன் ஆசைகளை லட்சியமாய் மாற்றி
அதில் நீ பயணம் செய்... சாலை ஓர பெண்கள் என்ன.....
உலகமே உன்னை உற்று பார்க்கும்....

Tuesday, January 19, 2010

மனிதன்... இரத்தம்.... பூமி... தண்ணீர்....

















எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான உறுப்புகளின் நீரோடை இரத்தம்.இரத்தின் நிறங்கள் வேறுபட்டாலும் 99% அனைத்து உயிரிங்களுகும் இரத்த ஓட்டம் என்பது பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது.கரப்பான் பூச்சிகளுகுள்ளயே ஆணின் இரத்தம் நிறமற்றதாய், முதிர்ந்த பெண்ணின் இரத்தம் சிவப்பு கலந்த மஞ்சளாகவும் வேறுபட்டிருகிறது .

உயிரினத்திலேயே மேன்மையாக கருதப்படும் உயிரினம் மனித இனம் .அவர்களின் இரத்தம் மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது .இன்றைய உலகில் இரத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை தேவையாக இருக்கிறது.அறுவை சிகிச்சைக்காக இரத்தம், விபத்து சிகிச்சைக்காக இரத்தம் இப்படி மனிதர்களின் இரத்தம் பல வகையில் பயன்படுகிறது .உடல் நிலை சீராக இருக்க இரத்தம் என்பது அத்தியாவிசயமான ஒன்றே.உடலிலே பல கோளாறுகள் வர காரணம் இரதமின்மையே.

விலங்குகளின் ரத்தமும் பல வகையில் பயன்படுகிறது உணவிற்காக,மருத்துவத்திற்காக என்று பல வகைபடுத்தலாம்.

















ஒரு மனிதனின் உடலில் எந்த வகையில் இரத்தபோக்கு ஏற்பட்டாலும், இழந்த ரத்தை முழுமையாக திரும்ப பெற 120 நாட்கள் ஆகின்றன.இது ஒரு சராசரி ஆரோக்கிய மனிதனின் உடலில் நடக்கும் வழக்கமான வேதியியல் நிகழ்வே. ஆரோக்கியமற்ற உடலிலோ இத்தகைய முறையான வேதியியல் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை என்பதே உண்மை.

எப்படி ஒரு உயிருக்கு இரத்தம் என்பது இன்றியமையாததோ அது போல தான் பூமிக்கும் தண்ணீர்.

















பூமியில் இருக்கும் தண்ணீரின் பயன் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் ஆயிரம். இரத்தம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பொறுத்தே அது மறுபடியும் உருவாவது நிர்ணயிக்கபடுகிறது. மனிதனுக்கு விபத்தினால் ஏற்படும் ரத்தபோக்கை கட்டுபடுத்தாமல் விட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.ரத்ததானம் மூலம் வேல்யாகும் இரத்தம் உடலில் சிக்கிரமே திரும்ப ஊற்றெடுக்கும்.

















மனிதனுக்கே இவ்வாறு என்றால் மனிதன் உருவாவதற்கு முன் உருவான பூமியின் நிலைப்பாடு எவ்வாறு என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். தண்ணீரானது சரியான தேவைக்காக மட்டுமே பயன்படுத்தபட்டால் அது ஊட்றேடுக்கும் வாய்ப்புகள் உண்டு இல்லையேல் விபத்தில் ஏற்படும் மனிதனின் நிலைமை தான் பூமிக்கும்.

மனிதனின் ரத்தம் அசுத்தப்படுத்த படுகிறது சுற்றுப்புற மாசு அதற்கான இயற்க்கை காரணியாய் இருப்பினும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை செயற்கை காரணிகள். இரத்தம் அசுத்தப்படுமேயானால் மனிதன் வாழ்நாள் குறையும் வாய்ப்புகள் மிக அதிகம். தண்ணீருக்கும் இது பொருந்தும்.தண்ணீர் மாசிர்கான இரற்கை காரணிகள் எதுவுமில்லை.அனைத்தும் செயற்கை காரணிகளே. தொழிற்சாலை கழிவு, சாக்கடை கழிவு போன்றவை தன தண்ணிரை மாசு படுத்துகிறது. தண்ணீர் மாசுபட்டால் அதனால் பயன்படும் இயற்கைவளங்கள் அழியும். பூமியும் தன்மை மாறும். இதற்கான தீர்வு நம்மிடம் தான் உள்ளது .அதனால் தண்ணீரை சேமியுங்கள், தண்ணிரை மாசை தடுங்கள் இந்த பூமியை காப்பற்றுங்கள்.

மனிதன்... இரத்தம்.... பூமி... தண்ணீர்....

Thursday, January 7, 2010

ஆல்-இன்-ஆல் அழகுராஜாவும் 420 யும்...










செந்தில் : அண்ணே என்ன பண்றீங்க....

கௌண்டமணி : Aeroplane ஓட்டிட்டு இருக்கேன் ... பார்த்த எப்படி தெரிது ஏன்டா சைக்கிள் கடைல என்னடா பண்ணுவாங்க பஞ்சர் தாண்ட ஓட்டிட்டு இருக்கேன் கோமுட்டி தலையா...

கஸ்டமர் : அண்ணே சைக்கிள் பஞ்சர் ஆய்டுச்சு பஞ்சர் ஓட்டனும்...

கௌண்டமணி : ஏன்டா சைக்கிளே பஞ்சர் ஆய்டுச்சா ... இல்ல சைக்கிள் டயர் பஞ்சர் ஆய்டுச்சா....

கஸ்டமர் : சைக்கிள் டயர்தானே பஞ்சர் ஆய்டுச்சு...

கௌண்டமணி : தெளிவா சொல்லுங்கடா.. எதோ நான் அறிவாளியா இருக்கிறதுனால எல்லாத்தையும் தெளிவா கேட்டு தெரிஞ்சுகிறேன்.இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜா இந்தியாவுல இருக்க வேண்டிய ஆளே இல்லடா அமெரிக்கவுள இருக்க வேண்டியவன் தப்பி தவறி இந்த வரப்பட்டிக்காட்டுல வந்து மாட்டிகிட்டேன் .சைக்கிள் விட்டுட்டு போபஞ்சர் போட்டு வெக்கிற ....

செந்தில் : ஏண்ணே அமெரிக்காவுல இருந்திருந்தா அங்கயும் சைக்கிள் கடைதான் வெச்சிருப்பீங்களனே ...

கௌண்டமணி : ஏன்டா கோமுட்டி தலைய உனக்கு நல்லதாவே தோனாதாடா .உன்னையெல்லாம் பக்கதுல அண்ட விட்டா அமெரிக்க இல்ல ஆண்டிபட்டி கூட போகமுடியதுடா இருந்தாலும் உன்னை என் நான் என்கூட சேர்த்துக்கிறேன் தெரியுமா எங்க வுட்டு நாய் செத்து போச்சு அன்னியில இருந்து பழையசோறு மிச்சமயிடுது அதை போடறதுக்காக உன்னை என்னோட சேர்த்துகிட்டு இருக்கேன் .. டேய் பனங்கொட்ட தலைய அந்த பம்பா எடுத்து சைக்கிளுக்கு காத்து அடிடா...

செந்தில் : சரினே ... அன்ன காத்து அடிச்சுட்டேனா ...

கௌண்டமணி : டேய் அரகொறைக்கு பொறந்தவனே .. tube செக் பண்ணுடா காத்து போகுதா இல்லையானு ....

செந்தில் : அண்ணே... காத்து போகலைனே .பஞ்சர் இல்லைன்னு நெனைகிறேன்..

கௌண்டமணி : என்னட இது டி காபி குடிக்க கூட காசு இல்ல
இப்ப என்ன பண்ணலாம்... சரி சும்மா ரெண்டு பஞ்சர்னு சொல்லி காசை கரந்துட வேண்டியது தான்..

செந்தில் : ஏண்ணே என்னணே இது நீங்களே 420 வேலை பண்ணலாமா...?

கௌண்டமணி : ஆமா நாங்க 420 இவரு 320.. போடா தீவிட்டி தலைய.. ஏன்டா 420 நா என்னனு தெரியுமா உனக்கு ...

செந்தில் :அண்ணே தெரியாதுனே...

கௌண்டமணி : அப்புறம் என்ன இதுக்குடா சொன்ன...

செந்தில் : இல்லைனே எல்லாரும் சொல்றாங்க அதனால நானும் சொன்னேன் ...

கௌண்டமணி : எல்லாரும் சொல்றாங்க எல்லாரும் சொல்றாங்காணு அது என்னனு தெரியாம நீயும் சொல்றா ஏண்டா இப்படி...... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா. 420 நா என்னனு தெளிவா சொல்றேன் உன் காதை தொறந்து
நல்ல கேட்டுக்க .. 420 நா இந்தியன் பீனல் கோடு ல ஒரு section டா அது.

இந்தியன் பீனல் கோடுங்கிறது புத்தகம் மாதிரி அதுல எந்தெந்த குற்றத்துக்கு என்னென தண்டனைநூ விளக்கமா எழுதிருப்பாங்க...இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்த நாட்டுல எல்லாம் section 420இருக்குதூடா.. நல்லவன் மாதிரி நடிச்சு ஒருத்தனை ஏமாத்தி சொத்தை புடுங்கிறவன் , அடுத்தவன் சொத்தை அளிக்கிறவானோ அதை ஏமாத்தி விக்கிறவனோ இல்ல ஸீல் வெச்சா ஒரு சொத்தை ஏமாத்தி அதை நல்ல சொத்து மாதிரி கமிச்சு ஏமாத்தி விக்கிறவனோ எவனா இருந்தாலும் 420 section கீழ 7 வருசம் ஜெயில் களி திங்கணும், கம்பி எண்ணனும்டாஅதுமட்டும் இல்லாம ஃபைன் வேற போடுவாங்க...

இப்ப தெரியுதா 420 நா என்னனு இனிமேல் சம்மந்தமிலாமா 420ங்கிர வார்த்தைய சொன்ன மவனே உன்னை பொலி போட்ருவேன் . இனிமேல் இந்த ஊருக்குல எவனாவது காரணமிலா 420ங்கிர வார்த்தைய சொன்னீங்க என்ன நடக்கும்னு எண்னகே தெரியாது...

செந்தில்:அன்ன இதெலாம் எங்க இருந்து நே காத்துக்கிடீங்க...

கௌண்டமணி : டேய் வேண்டாம் எனக்கு தெரியும் நீ எதுக்காக இந்த கேள்விய கேட்குரேனு .நீ இப்படி கேட்டா நான் அதுக்கு "இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்" நு சொலவேன்னு நெனச்சுதானே இதை கேட்டா..

இப்போ சொலரேண்ட எனக்கு அரசியல் புடிக்காதுடா என்னை விடுங்கடா...

Wednesday, January 6, 2010

கவிதை.....

இதயம் உயிர்ப்பெறட்டும்...

என் முகம் தன்னில் உனை காட்டும் கண்ணாடியாய் என் கண்கள்...
உன் மொழி தன்னை என் இதயம் தொட கொண்டு செல்லும்
ஒலிப்பெரிக்கியாய் என் செவிகள்...
இவை இரண்டு மட்டும் செயல்பட ... என் இதயம்
மட்டும் இன்று இறந்து கிடக்கிறது....
உன் காதலைச்சொல்.. இதயம் உயிர்ப்பெறட்டும் ...


மாரடைப்பு...



காதல்(வாழ்கையில்) தோல்வியினால் இதயத்தில் ஏற்படும் பூகம்பம்...
மாரடைப்பு...



கொசுவத்தி


(சிறு)பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பாரகள்...
ஏனோ தெரியவில்லை பாம்பை போல என்னை படைத்திருந்தாலும்..
கொசுவை கொல்ல மட்டுமே என்னை கொளுத்துகிறார்கள்.. கொசுவத்தி...



அவள் ...


நெஞ்சு வலிக்கிறது சில நாட்களாக ஏனென்று தெரியும்..
தைலம் தடவச்சொன்னால் என் அம்மா வேண்டாம் என்றேன்...
என் இதயத்தில் இருப்பது அவள் என்று தெரியாமல்..
தடவினால் போகக்கூடிய வலியா... அவள்...

Tuesday, January 5, 2010

தூங்குவதை போல் நடிக்கிறார்கள்











ஆற்காட்டார் : தலைவரே வணக்கம்...

தலைவர்: வாங்க ஆற்காட்டார் தம்பி. எப்படி இருக்கீங்க..

ஆற்காட்டார் : நான் நல்லா இருக்கேன் நீங்க சௌக்கியமா இருக்கீங்களா.
தளபதி எப்படி இருக்கார்....

தலைவர்: அனைவரும் நலம்.... அப்புறம் தொகுதி நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு.எப்படியும் அடுத்த தடவையும் நாம வந்துருவோம்னு நெனக்கிறேன்.

ஆற்காட்டார்: கண்டிப்பா தலைவரே அதிலென்ன சந்தேகம்..நீங்க அந்த காப்பீட்டு திட்டம் இந்த காப்பீட்டு திட்டம்னு போட்டு டெரர் அ இருக்கீங்க மக்கள் மத்தியில ... அப்படி இருக்கிறப்போ நம்மளை எவனும் இம்ம்ம் அசைச்சிக்க முடியாது...

தலைவர்: ஹ்ம்... சரியாய் சொன்னீங்க தம்பி. எப்படியோ புலிகளோட தலைவனை கொன்னுடதால அந்த பிரச்சனையை மக்கள் மறந்துட்டாங்க.ஆயிரம் பிரச்சனை எனக்கிருக்க இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாம் எனக்கேதுக்கு சொல்லுங்க ... எப்படியாவது தளபதியை அடுத்து
முதல்வர்ராக்கிடனும் .. அப்புறம் பேரபுள்ளைங்க எல்லாம் சினிமாள கூத்து காட்ட கிளம்பிட்டாங்க .. அதனால தான இப்பெல்லாம் சினிமாகாரங்களுக்கு நெறைய சலுகைகள் பண்றேன் ... அடுத்தது செம்மொழி வாங்கித்தரேன்னு சொல்லிருக்கோம் இல்ல அதை கொஞ்ச நாள் வெச்சு காலம் ஓட்டலாம் ...

ஆனா இலங்கை தமிழர் பிரெச்சனை இருக்கே ஐயோ சாமி.உண்ணவிரதம் அப்படி இப்படி னு செய்யங்காட்டி தான் இப்போ கொஞ்சம் ஓய்வா இருக்க முடியுது .. நாம என்னைக்கும் தூங்க போறதில்ல தூங்கிர மாதிரி நடிக்கணும்.... அப்பா தான் பொழப்பை ஓட்ட முடியும் தம்பி.... அப்புறம் வேற என்ன விஷயம்... சூரிய ஒளி ல மின்சாரம் வீட்டில உபயோகபடுத்தனும்னு சொன்னது எந்த அளவுக்கு மக்கள் கிட்ட போயிருக்கு ....

ஆற்காட்டார்: ஹ்ம் ஏதோ செய்திகள்ல வரணும்னு நாம சொல்ல வேண்டியிருக்கே.... எப்படியும் நம்ம வீட்டில இதெல்லாம் செய்ய போறதில்ல.. ஏதோ மக்கள் நாம சொல்றதை கேட்டு செஞ்சாங்கனா .. கரண்ட் அடிக்கடிஆஃப் பண்ணினாலும் எவனும் கம்ப்ளைன்ட் பண்ண போறதில்ல .நமக்கு தேவைனா எங்க இருந்து வேணும்னாலும் கரண்ட் எடுத்துக்கலாம் எவன் எப்படி போன நமக்கு என்ன...நம்ம காட்சி கூட்டம் மாநாடு எல்லாத்துக்கும் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணிக்கிறோம் ... எவனுக்கு தெரிய போகுது இதெல்லாம்... Government ரூல்ஸ் இருக்கு ஜெநரேடார் தான் யூஸ் பண்ணனும்னு ...எவனுக்கும் அந்த அளவுக்கு விஷயம் ம் தெரியாது அதனால நம்ம ராஜ்ஜியம் தான் தலைவரே...

தலைவர்: ஆமாம்ந்த்ம்பி... சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருந்து எப்படியோ அம்மா கிட்ட இருந்து தனி தெலுங்கான வாங்குறதுக்கு முயற்சி பண்ணிருக்கார் ... நாமளும் இந்த மாதிரி தொடர் உண்ண விரதம் இருந்திருன்தொம்ன்ன கண்டிப்பா இலங்கை தமிழர் பிரச்சனை தீர்றதுகான வாய்ப்பு கண்டிப்பா இருந்திருக்கும்... பொட்டி ராமுழு ஒரு ஆள் இதே போல தனி அந்தர மாநிலம் வேணும்னு 1958 ல 58 நாள் உண்ணாவிரதம் இருந்து மண்டயப்போட்டுட்டார் அப்போ ராஜாஜி, நேரு எல்லாம் வேணும்னே கண்டுக்காம விட்டுடாங்க ... அது மாதிரி நம்மளையும் விட்டுடாங்கன்னா என்ன பண்றது இப்போ.... அதனால தான் சொல்றேன் தூங்குற மாதிரி நடிக்கணும் ஆனா தூங்கக்கூடாது...சரி தம்பி நான் தூங்க போறேன் நீங்க கெளம்புங்க காத்து வரட்டும்...

ஆற்காட்டார்: சரிங்க தலைவரே வணக்கம் கிளம்புறேன் ....