Saturday, November 7, 2009

நம்பிக்கை.....

குமாரசுந்தரம் அரசு அலுவாலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் மதுரையில் வசித்து வருகிரார். அவருக்கு ஒரு மனைவி சுசீலா,ஒரு மகன் மனோகர் , இரண்டு மகள்கள் பூர்ணிமா மற்றும் பிரியா . மகனை டிப்ளோமா படிக்க வைத்தார். அதற்கு மேல் அவரால் மனோகரை படிக்க வைக்க இயலவில்லை.

எனவே மனோகர் சில ஆண்டு காலம் சென்னையிலே பணியாற்றினான் பணியாற்றியவரே பொறியியல் பட்டபடிப்பையும் படித்து முடித்தான்.தன் நண்பனின் அண்ணன் உதவியால் பெரிய நிறுவனத்திலே ஒரு நல்ல பணி கிடைக்க பெற்றான்.
படிக்கும் காலத்திலேயே பணியாற்றிய முன்னனுபவம் இருந்ததால் சிறப்பான ஊதியமும் கிடைக்க பெற்றான். சிறிது காலம் கழித்து அவன் அமெரிக்க அனுப்பப்பட்டான் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான். மனோகருக்கு தானே படித்து வாழ்கையில் உயர்ந்தான் என்ற அகம்பாவம் தன் தந்தை தனக்கு என்ன பெரிதாக செய்துவிட்டார் என்ற சின்ன புத்தித்தனம் ..தன் மகன் தனக்கு பிறகு தனது குடும்ப்பத்தை காப்பாற்றுவான் என்ற அவரது நம்பிக்கை கானல் நீரானது...

சுந்தரம் சோர்ந்து விடவில்லை தங்கமாய் தனது மகள்கள் இருகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கையை ஓட்ட தொடங்கினார். இன்று பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது மனோகர் திருமணம் முடிந்து. இப்போது பூர்ணிமா பொறியியல் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். சுந்தரம் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு ஆகிறது மாதாமாதம் ஓய்வுதியம் கிடைக்கிறது ஆனால் தன் ஓய்விர்க்கான
மற்ற தொகைகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.அதற்காக அவர் அனுதினமும் அரசாங்க அலுவலகத்திற்கு சென்று வருகிறார் அதிகாரிகளும் "நாளை" "நாளை " என்று நாட்களை கடத்திகொண்டிருந்தனர். சுந்தரம் நேர்மையை பணியாற்றியயதலோ எனவோஅவரால் சைக்கிளை தவிர வேறு வாகனங்கள் வாங்க இயலவில்லை.

இன்றும் வழக்கம் போல் கிளம்பினார்.பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அவரருகே இன்னொரு பெரியவர் வந்து அமர்ந்தார் சற்று தூரம் சென்றிருக்கும் அந்த பெரியவர் சுந்தரத்திடம் பேசலானார்.. இருவரும் பேசிகொண்டே பயணித்தனர். அவர்களது முன் சீட்டில் "j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" அதை பார்த்த பெரியார் சுந்தரத்திடம் "பாருங்க சார் என்ன எழுதிருகாங்கனு. இதுங்க எல்லாம் எப்படித்தான் முன்னேற போகுதோ தெரியல" அதை பார்த்த சுந்தரத்திற்கு ஒரே அதிர்ச்சி தனது மகளின் பெயர் எழுதியிருப்பது அவருக்குள் இடியாய்
இறங்கியது. சற்று கலங்கி போனார், இருப்பினும் தன் மகள் மேல்
அதிக நம்பிக்கை கொண்டதால் வேறு யாராவது இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு தன் வேலைகளை முடித்து கொண்டு வீடு திரும்பினார். பணம் கிடைத்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள அன்று மாலை நண்பரை பார்க்க பக்கத்து தெருவிற்கு புறப்பட்டார் செல்லும் வழியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது கடவுளை வணங்கி விட்டு செல்லலாம் என்று உள்ளே சென்றார். அங்கே தனது மகளும் தாடியுடன் கூடிய ஒரு வாலிபனும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார.தன் மகள் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகி போன விரக்தியில் விட்டுக்கு திரும்பி சென்றார் . அவளும் மனோகர் செய்ததை போல் செயடுவிடுவாலோ என்ற கவலை அவரை தொற்றிக்கொண்டது ...

அவர் மனைவி சுசீலா "என்னங்க அதுக்குள்ள வந்துடீங்க?". "ஒண்ணுமில்ல
லேசா தலை வலிக்குது நான் கொஞ்சம் rest எடுக்கிறேன்" என்று சொல்லிகொண்டே தனது அறைக்குள்ளே நுழைந்து தாளிட்டு கொண்டார். இரவு 12 மணி ஆகியும் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.பணம் கிடைக்காமல்
இருந்தபோது கூட நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த சுந்தரம் இன்று பணம் கிடைத்தும் தனது மகளை நினைத்து மனவேதனையால் துடித்து கொண்டிருந்தார் விடிந்தும் விட்டது... அன்று வழக்கம் போல் பூர்ணிமா கல்லுரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்... சுந்தரம் எழுந்து ஹாலுக்கு சென்று சோபாவிலே அமர்ந்து மனமற்றவராய் செய்தித்தாளை புரட்டலானார். அப்போது பூர்ணிமா "அப்பா நான் கிளம்புறேன் பா" என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டால் அப்போது சுசீலா "ஏண்டி சாப்டுட்டு போடி" "வேண்டாம்மா" என்று கிளம்பிவிட்டாள்.

அரை மணி நேரம் கழித்து பூர்ணிமா கோவிலிலே பார்த்த பையனுடன் வீட்டிற்க்கு திரும்பி வந்தால்.அதை பார்த்த சுந்தரத்திற்கு தூக்கி வாரி போட்டது. அதற்குள்ளகாவே இருவரும் உள்ளே வந்து விட சுசீலா "என்னடி காலேஜ்க்கு போகாமா இங்க என்னடி பண்ற". "அம்மா உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்.. இவர் தன் பாஸ்கர்ராஜ் காலேஜ்ல என்கூட படிக்கிறார் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்" இடையில் குருகிட்ட சுசீலா "என்னடி உனக்கு என்னை தைரியம் இருந்த எங்க கிட்டயே வந்து இந்த விஷத்தை சொல்லுவா அதுவும் அந்த பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து. என்னங்க அவ பாட்டுக்கு பேசிட்டு இருக்க நீங்க எதுவும் சொல்லாம அமைதியா உக்கந்திருகீங்க..? ".

அதற்கு சுந்தரம் "என்ன சொல்ல சொல்ற நமக்கு குடுத்து வெச்சது அவ்ளோ தான்" என்று சொல்லிவிட்டு மௌனமானார். பாஸ்கர்ராஜ் "சார் நீங்க எங்களை தப்ப புரிஞ்சுகிடீங்க நான் தன first உங்க பொண்ணை லவ் பண்ணினேன் அவ ரொம்ப நாள் ஒத்துகல உங்களை பத்தியும் உங்க family பத்தியும் எவ்ளோவோ விஷயம் என்கிட்டே சொல்லிருக்க, மனோகர்னால ஏன்கனவே நீங்க நொந்து போன விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். அதனால் தன் நாங்க ஒரு முடிவு பண்ணிருகோம். அது என்னனா இன்னும் 6 வருஷதுக்குள்ள என்னோட பாமிலிக்கு தேவையான எல்லா விஷயங்களும் நான் செயதுமுடிசிடுவேன் உங்களோட பாமிலி தேவைகளை பூர்ணிமா முடிச்சிடுவாள், ப்ரியாவின் படிப்பு மற்றும் கல்யாணம் முதற்கொண்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்களோட என்னோட parents permission ஓட marriage பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருகோம் சார்"."

ஆமாம் பா அதனால தன் ப்ரியாவுக்கு கூட தெரியகுடதுன்னு நாங்க அவ ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் உங்க கிட்ட வந்து இதை பத்தி பேசுறோம். நாங்க இதுவரை பார்க், பீச்னு எங்கும் சுத்தினது கிடையாது பா, காலேஜ்கான்டீன் ல கூட போய் உக்காந்து பேசினது கிடையாது வாரத்துல ரெண்டு நாள் எதாவது ஒரு கோவில்ல உக்காந்து ஒருமணி நேரம் பேசுவோம் பா எனக்கு தெரியும் பா நீங்களும் அம்மாவும் அண்ணனை நெனச்சு எவ்ளோ நாள் வேதனை பட்டிருபீங்க. அதே வேதனையை உங்களுக்கு நான் குடுக்கமாட்டேன் பா. எனக்கு campus interview ல வேலை கிடைச்சிருக்கு அது உங்கள்ளுக்கு தெரியும் அவருக்கும் தன் கிடைச்சிருக்கு..

இன்னும் ரெண்டு மாசத்துல கோர்ஸ் முடிஞ்சிடும் அதனால் தன் இப்ப உங்கக்கிடா சொல்லலாம்னு முடிவெடுத்து சொல்றோம் பா. நீங்களும் அம்மாவும் பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்கப்பா.நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுகிறீங்கலோ அதை நாங்க ஏத்துகிறோம்.இவர் வீட்ல பேசிட்டோம் அவங்க உங்களுக்கு ஓகேந அவங்களுக்கும் ஓகே நு சொல்லிருகாங்க"... நாங்க காலேஜ் கிளம்புறோம் பா கிளம்புறோம் மா. பாஸ்கர்ராஜ் "சார் கிளம்பறோம் சார் அம்மா வரேன் மா. " என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிட்டார்கள்.. சுந்தரம் மனதில் இருந்த பாரம் இறங்கி மனம் பூ போல லேசானது. நம்பிக்கை என்ற வார்த்தைக்கு இன்று தான் தனக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக தன் மகள் இருந்திருக்கிறாள் என்று பெருமிதம் கொண்டார்.

பின் குறிப்பு:
"j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" என்று பஸ்சில், இவர்களுக்கு வேண்டாதவர்கள்
எழுதிவிட்டனர்...

3 comments:

கலையரசன் said...

தலைப்பு அட்டகாசம்...

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

rajeshkannan said...

நன்றி. நீங்க சொன்னது மாதரியே செஞ்சுட்டேன்