Thursday, December 31, 2009

கவிதை.....

காதல் கடிதங்கள்...


பலமுறை படித்திருந்தாலும் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் அக்க்ஷய புத்தகம்... காதல் கடிதங்கள்...



காதல் தோல்வி....

மழைக்கால மேகமாய் நீ குடை கொண்டு தருவாயா நீ ...
உன் மழைகாலம் பொய்யானால் என் இலைகள் தான் உதிர்ந்தோடுமே...
வானில் பறக்கும் கிளிகள் என் நெஞ்சில் உனது இதழ் ஈரத்துளிகள் ...
சுவாசிக்க மட்டும் தெரிந்த என்னை புகைக்க வைக்காதே...
உன் நினைவில் கொன்று இன்று என்னை புதைத்து விடாதே .....
காதல் தோல்வி....

தாய்...

பத்து மாதங்கள் வரை நீ தூங்கிவிட கூடாது என்று
விழித்துக்கொண்டே வயிற்றை தடவிக்கொண்டிருப்பவள்...
பத்து மாதங்களுக்குப்பின் நீ தூங்கவேண்டும் என்று
விழித்துக்கொண்டே உன்னை தடவிக்கொண்டிருப்பவள்....
நீ தடுக்கி விழுந்தாலும் தட்டி விட்டாலும்
உன்னை என்றுமே தடவி கொண்டிருப்பவள் .. தாய்...

Monday, December 28, 2009

கவிதை.....

பனி....


காதலன்(சூரியன்) முகம் கண்டதும்
வெட்கத்தில் உருகும் தண்ணீர் பெண் .... பனி...


புயல்...

காதலில் தோல்வியடைந்து கடலில் தற்கொலை செய்துகொண்டவர்கள்
கரையில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளை பார்த்து விடும் பெருமூச்சு .... புயல்...

மழை....


ஏழைகள் கண்ணீர் விடாமல் இருக்க ...
கடவுள் விடும் ஆனந்தக் கண்ணீர்.... மழை...


முத்தம் ....


கத்தியின்றி ரத்தமின்றி இரு இதழ்களுக்குள் நடக்கும் இனிமையான யுத்தம்.... முத்தம்


இதயமும் விழியும் ...

நீ (விழி) தூங்கினாலும் விழித்திருந்தாலும் நான் (இதயம்) தூங்குவதில்லை ....
நான் தூங்கினால் நீ என்றுமே விழிப்பதற்கில்லை ...


தூக்கம் ...


இரு விழி திறைகளுக்குள் நடக்கும் முதலிரவு .... தூக்கம்...




என் காதலி ....

வாழை தண்டம் அவள் மேனி...
அவள் நடையிலே ஒரு கலைவாணி ...
என்னை கண்டதும் அவள் நாணி ...
என் நெஞ்சில் அறைந்துவிட்டாள் ஒரு ஆணி...
என்னை அவள் இன்று ஆக்கி விட்டால் ஒரு ஞானி ....
என் காதலி ....

இதயத்துடிப்பு ...

இதயம் துடிப்பது 72 முறை...
காதலிக்கும் பொழுது 114 முறை...
மாரடைப்பு வரும் பொழுதோ 30 முறை...
காதல் தோற்கும் பொழுதும் 30 முறை ...
இதனால் தான் என்னவோ காதலை இதயத்துடன் இணைதிருக்கிரார்களோ ...?

விடியல்...


இருளின் பிரசவம்... விடியல்...

Saturday, November 21, 2009

வானம் தொட்டு விடும் தூரம் தான்...

வானம் தொட்டு விடும் தூரம் தான்...

உணவு பசியை போக்க ...

தண்ணீர் தாகத்தை போக்க..

வாசணை(நறுமணம்) துர்நாற்றத்தை போக்க ..

வயோதிகம் வாலிபத்தை போக்க..

சிரிப்பு கண்ணீரை போக்க ..

உடை நிர்வாணத்தை போக்க..

மழை வெப்பத்தை போக்க..

வெயில் குளிரை போக்க...

எமன் உயிரை போக்க...

பொதுநலம் சுயநலத்தை போக்க...

ஆலயம் கவலையை போக்க..

பணம் ஏழ்மையை போக்க ...

குடி குடியை போக்க...

நன்மை தீமையை போக்க ...

............................................................
எல்லாவற்றிற்கும் மாற்று உண்டு...

வானம் தொட்டு விடும் தூரம் தான்...

Tuesday, November 10, 2009

மண் சட்டி ......


குருராஜா ஒரு அரசாங்க அலுவலகத்திலே சிறப்பான சம்பளத்துடன் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவி ஷீலா மற்றும்
9 வயதான மகன் சித்தார்த் . ஒரு சிறப்பான குடும்ப தலைவனாய் இருந்தானே தவிர ஒரு நல்ல தனயனாய் அவனது பெற்றோருக்கு அவன் இருக்க வில்லை. குருராஜவிர்க்கு 9 அண்ணன்கள் , 3 அக்காக்கள் அவனுடைய தந்தைக்கு இவர்களை கரை எற்றுவதற்குள்ளகாவே 60 வயதை கடந்து விட்டார்.

தனது மனைவியையும் ஒரு ஆண்டுக்கும் முன் இழந்து விட்டார். குருராஜா கடைசி பிள்ளை என்பதால் அவனுக்கு எல்லா சலுகைகளையும் வழங்கினார்.
அவனும் பெற்றோர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவனாய் இருந்தான்.எல்லா பிள்ளைகளும் தன் தாய் தந்தையை உதறினாலும் அவர்களை நான் காப்பாற்றுவேன் என்று அவர்களை தன்னுடனே வைத்துகொண்டான்.
திருமணமான 3 ஆண்டுகளிலேயே தான் தாய் தந்தையரை பாரமாய்நினைக்க துவங்கினான். அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய மறந்தான். அதனலயே அவனது தாய் நோய்வாய்பட்டு ஒரு ஆண்டுக்குமுன் இறந்து போனார்.

இன்று இவன் தந்தைக்கோ 70 வயது, நடக்க முடியாமல் கிடையாய் படுத்திருந்தார். அவருக்கென தனியாக வீட்டருகே ஒரு ஓலை குடிசையை உருவாக்கி அங்கே ஒரு கயிற்று கட்டிலிலே கிடத்தினான் பெரியவரை குருராஜா.
அங்கே அவருகென ஒரு மண் சட்டியிலே சாப்பாடு போடுவது வழக்கம். அதுவும் தான் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து தான் போடா சொல்வான். இதை அவனது மகன் சித்தார்த் தினமும் பார்த்துக்கொண்டிருபான். அவனோ அவனது மனைவியோ இந்த பெரியவர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பி பார்க்கமாட்டார்கள். சித்தர்த்தையும் போக விட மாட்டார்கள் இருப்பினும்,
சித்தார்த் யாருக்கும் தெரியாமல் அவனது தாத்தாவை பார்க்க போவதுண்டு அப்போதெல்லாம் அவனுக்கு ஒரு கதை சொல்வார் அந்த பெரியவர்.

நாற்றமும் அசிங்கமுமாய் இருந்தாலும் அவனுடைய தாத்தாவின்
மேல் அவனுக்கு கொள்ளை ப்ரியம்.

ஒரு நாள் அவர் இறந்துபோகவே சித்தார்த் துடி துடித்துப்போனான். குருராஜா இறுதி சடங்குகளை முடித்து விட்டு வீடு திரும்பினான்.வந்தவுடன் குடிசைக்குள் நுழைந்தான் அங்கே இருந்த மண் சட்டியை வெளியில் எடுத்து கொண்டு வந்தான்.அதை பார்த்த சிட்தார்த் "அப்பா என்ன பண்றீங்க" அதற்க்கு குருராஜா "இந்த சட்டிய கொண்டு போய் வெளியிலே தூக்கி போட போறேன்டா " என்றான். அதை கேட்ட சித்தார்த் "அப்பா வேண்டாம் பா அதை தூக்கி போடாதீங்க, அது இங்காயே இருக்கட்டும் நாளைக்கு நீங்க வயசானதுக்கபுரம் உங்களுக்கு சாப்பாடு போட அது பயன்படும் " என்று சொன்னதை கேட்ட குருராஜவிற்கு நெஞ்சிலே சூடு வைத்தது போல் ஆனது.

சட்டியை கீழே தவற விட்டான் உடைந்தது மண் சட்டி, உடைந்தது மண் சட்டி மட்டும் அல்ல அவனது மனசும் தான்.


பின் குறிப்பு: எங்கோ.... எதிலோ படித்தது....

Saturday, November 7, 2009

நம்பிக்கை.....

குமாரசுந்தரம் அரசு அலுவாலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் மதுரையில் வசித்து வருகிரார். அவருக்கு ஒரு மனைவி சுசீலா,ஒரு மகன் மனோகர் , இரண்டு மகள்கள் பூர்ணிமா மற்றும் பிரியா . மகனை டிப்ளோமா படிக்க வைத்தார். அதற்கு மேல் அவரால் மனோகரை படிக்க வைக்க இயலவில்லை.

எனவே மனோகர் சில ஆண்டு காலம் சென்னையிலே பணியாற்றினான் பணியாற்றியவரே பொறியியல் பட்டபடிப்பையும் படித்து முடித்தான்.தன் நண்பனின் அண்ணன் உதவியால் பெரிய நிறுவனத்திலே ஒரு நல்ல பணி கிடைக்க பெற்றான்.
படிக்கும் காலத்திலேயே பணியாற்றிய முன்னனுபவம் இருந்ததால் சிறப்பான ஊதியமும் கிடைக்க பெற்றான். சிறிது காலம் கழித்து அவன் அமெரிக்க அனுப்பப்பட்டான் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டு அங்கேயே இருந்து விட்டான். மனோகருக்கு தானே படித்து வாழ்கையில் உயர்ந்தான் என்ற அகம்பாவம் தன் தந்தை தனக்கு என்ன பெரிதாக செய்துவிட்டார் என்ற சின்ன புத்தித்தனம் ..தன் மகன் தனக்கு பிறகு தனது குடும்ப்பத்தை காப்பாற்றுவான் என்ற அவரது நம்பிக்கை கானல் நீரானது...

சுந்தரம் சோர்ந்து விடவில்லை தங்கமாய் தனது மகள்கள் இருகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கையை ஓட்ட தொடங்கினார். இன்று பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது மனோகர் திருமணம் முடிந்து. இப்போது பூர்ணிமா பொறியியல் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். சுந்தரம் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு ஆகிறது மாதாமாதம் ஓய்வுதியம் கிடைக்கிறது ஆனால் தன் ஓய்விர்க்கான
மற்ற தொகைகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.அதற்காக அவர் அனுதினமும் அரசாங்க அலுவலகத்திற்கு சென்று வருகிறார் அதிகாரிகளும் "நாளை" "நாளை " என்று நாட்களை கடத்திகொண்டிருந்தனர். சுந்தரம் நேர்மையை பணியாற்றியயதலோ எனவோஅவரால் சைக்கிளை தவிர வேறு வாகனங்கள் வாங்க இயலவில்லை.

இன்றும் வழக்கம் போல் கிளம்பினார்.பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அவரருகே இன்னொரு பெரியவர் வந்து அமர்ந்தார் சற்று தூரம் சென்றிருக்கும் அந்த பெரியவர் சுந்தரத்திடம் பேசலானார்.. இருவரும் பேசிகொண்டே பயணித்தனர். அவர்களது முன் சீட்டில் "j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" அதை பார்த்த பெரியார் சுந்தரத்திடம் "பாருங்க சார் என்ன எழுதிருகாங்கனு. இதுங்க எல்லாம் எப்படித்தான் முன்னேற போகுதோ தெரியல" அதை பார்த்த சுந்தரத்திற்கு ஒரே அதிர்ச்சி தனது மகளின் பெயர் எழுதியிருப்பது அவருக்குள் இடியாய்
இறங்கியது. சற்று கலங்கி போனார், இருப்பினும் தன் மகள் மேல்
அதிக நம்பிக்கை கொண்டதால் வேறு யாராவது இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு தன் வேலைகளை முடித்து கொண்டு வீடு திரும்பினார். பணம் கிடைத்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள அன்று மாலை நண்பரை பார்க்க பக்கத்து தெருவிற்கு புறப்பட்டார் செல்லும் வழியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது கடவுளை வணங்கி விட்டு செல்லலாம் என்று உள்ளே சென்றார். அங்கே தனது மகளும் தாடியுடன் கூடிய ஒரு வாலிபனும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார.தன் மகள் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகி போன விரக்தியில் விட்டுக்கு திரும்பி சென்றார் . அவளும் மனோகர் செய்ததை போல் செயடுவிடுவாலோ என்ற கவலை அவரை தொற்றிக்கொண்டது ...

அவர் மனைவி சுசீலா "என்னங்க அதுக்குள்ள வந்துடீங்க?". "ஒண்ணுமில்ல
லேசா தலை வலிக்குது நான் கொஞ்சம் rest எடுக்கிறேன்" என்று சொல்லிகொண்டே தனது அறைக்குள்ளே நுழைந்து தாளிட்டு கொண்டார். இரவு 12 மணி ஆகியும் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.பணம் கிடைக்காமல்
இருந்தபோது கூட நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த சுந்தரம் இன்று பணம் கிடைத்தும் தனது மகளை நினைத்து மனவேதனையால் துடித்து கொண்டிருந்தார் விடிந்தும் விட்டது... அன்று வழக்கம் போல் பூர்ணிமா கல்லுரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்... சுந்தரம் எழுந்து ஹாலுக்கு சென்று சோபாவிலே அமர்ந்து மனமற்றவராய் செய்தித்தாளை புரட்டலானார். அப்போது பூர்ணிமா "அப்பா நான் கிளம்புறேன் பா" என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டால் அப்போது சுசீலா "ஏண்டி சாப்டுட்டு போடி" "வேண்டாம்மா" என்று கிளம்பிவிட்டாள்.

அரை மணி நேரம் கழித்து பூர்ணிமா கோவிலிலே பார்த்த பையனுடன் வீட்டிற்க்கு திரும்பி வந்தால்.அதை பார்த்த சுந்தரத்திற்கு தூக்கி வாரி போட்டது. அதற்குள்ளகாவே இருவரும் உள்ளே வந்து விட சுசீலா "என்னடி காலேஜ்க்கு போகாமா இங்க என்னடி பண்ற". "அம்மா உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்.. இவர் தன் பாஸ்கர்ராஜ் காலேஜ்ல என்கூட படிக்கிறார் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்" இடையில் குருகிட்ட சுசீலா "என்னடி உனக்கு என்னை தைரியம் இருந்த எங்க கிட்டயே வந்து இந்த விஷத்தை சொல்லுவா அதுவும் அந்த பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து. என்னங்க அவ பாட்டுக்கு பேசிட்டு இருக்க நீங்க எதுவும் சொல்லாம அமைதியா உக்கந்திருகீங்க..? ".

அதற்கு சுந்தரம் "என்ன சொல்ல சொல்ற நமக்கு குடுத்து வெச்சது அவ்ளோ தான்" என்று சொல்லிவிட்டு மௌனமானார். பாஸ்கர்ராஜ் "சார் நீங்க எங்களை தப்ப புரிஞ்சுகிடீங்க நான் தன first உங்க பொண்ணை லவ் பண்ணினேன் அவ ரொம்ப நாள் ஒத்துகல உங்களை பத்தியும் உங்க family பத்தியும் எவ்ளோவோ விஷயம் என்கிட்டே சொல்லிருக்க, மனோகர்னால ஏன்கனவே நீங்க நொந்து போன விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். அதனால் தன் நாங்க ஒரு முடிவு பண்ணிருகோம். அது என்னனா இன்னும் 6 வருஷதுக்குள்ள என்னோட பாமிலிக்கு தேவையான எல்லா விஷயங்களும் நான் செயதுமுடிசிடுவேன் உங்களோட பாமிலி தேவைகளை பூர்ணிமா முடிச்சிடுவாள், ப்ரியாவின் படிப்பு மற்றும் கல்யாணம் முதற்கொண்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்களோட என்னோட parents permission ஓட marriage பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருகோம் சார்"."

ஆமாம் பா அதனால தன் ப்ரியாவுக்கு கூட தெரியகுடதுன்னு நாங்க அவ ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் உங்க கிட்ட வந்து இதை பத்தி பேசுறோம். நாங்க இதுவரை பார்க், பீச்னு எங்கும் சுத்தினது கிடையாது பா, காலேஜ்கான்டீன் ல கூட போய் உக்காந்து பேசினது கிடையாது வாரத்துல ரெண்டு நாள் எதாவது ஒரு கோவில்ல உக்காந்து ஒருமணி நேரம் பேசுவோம் பா எனக்கு தெரியும் பா நீங்களும் அம்மாவும் அண்ணனை நெனச்சு எவ்ளோ நாள் வேதனை பட்டிருபீங்க. அதே வேதனையை உங்களுக்கு நான் குடுக்கமாட்டேன் பா. எனக்கு campus interview ல வேலை கிடைச்சிருக்கு அது உங்கள்ளுக்கு தெரியும் அவருக்கும் தன் கிடைச்சிருக்கு..

இன்னும் ரெண்டு மாசத்துல கோர்ஸ் முடிஞ்சிடும் அதனால் தன் இப்ப உங்கக்கிடா சொல்லலாம்னு முடிவெடுத்து சொல்றோம் பா. நீங்களும் அம்மாவும் பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்கப்பா.நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுகிறீங்கலோ அதை நாங்க ஏத்துகிறோம்.இவர் வீட்ல பேசிட்டோம் அவங்க உங்களுக்கு ஓகேந அவங்களுக்கும் ஓகே நு சொல்லிருகாங்க"... நாங்க காலேஜ் கிளம்புறோம் பா கிளம்புறோம் மா. பாஸ்கர்ராஜ் "சார் கிளம்பறோம் சார் அம்மா வரேன் மா. " என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிட்டார்கள்.. சுந்தரம் மனதில் இருந்த பாரம் இறங்கி மனம் பூ போல லேசானது. நம்பிக்கை என்ற வார்த்தைக்கு இன்று தான் தனக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக தன் மகள் இருந்திருக்கிறாள் என்று பெருமிதம் கொண்டார்.

பின் குறிப்பு:
"j.பாஸ்கர்ராஜ் loves k.பூர்ணிமா" என்று பஸ்சில், இவர்களுக்கு வேண்டாதவர்கள்
எழுதிவிட்டனர்...

Thursday, November 5, 2009

உன் உயிர் உனக்கு சொந்தமா ?

ராமன் தனக்கென சொந்தமாக ஒரு செய்தித்தாள் நிறுவனத்தை நடத்தி
வந்தான். நேர்மையாகவும், உணமையான சம்பவங்களும், எந்த ஒரு
அரசியல் கட்சியும் சாராமல் உள்ளது உள்ளபடியே ஆச்சு பிசகாமல்
செய்திகளை சொல்லும் ஒரே நாளிதழாய் "அசோகா மித்திரன்" விளங்கியது.
அதனலயே பல அரசியயல் கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆளானான் ராமன்...
சமுக அக்கறை கொண்டவர்கள் மத்தியில் இவனுடைய
செய்திகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. அதுவே இவனை எதற்கும் பயப்படாமல் பல உண்மை செய்திகளை சொல்ல ஒரு உந்துதலாய் இருந்தது...

அமைச்சர் எழிலரசன் ஒரு தனி மனித அரசாங்கமே நடத்தி வந்தான் ..
மகளின் நலனை பார்த்தனே தவிர மக்களின் நலனுக்கு 10 பைசாவுக்கு
உபயோகமற்றவனாய் அரசியல் நடத்தி வந்தான். இவனை பற்றிய செய்திகளே அசோக மித்ரனில் பிரசித்தி பெற்றவையாய் விளங்கின.

இந்த முறை எளிரசனை பற்றி அசோகா மித்ரனில் வந்த செய்தி அவனது அரசியல் அஷ்திவாரதுக்கே பேர் இடியாக இருந்தது. அதனால் அவனது எடுபிடிகள் எப்படியாவது ராமனை ஒழித்து கட்ட வேண்டும் என்ற முடிவோடு கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள், அதிலும் எளிலரசனின் பாத்திரத்திற்கு உகந்தவனான மாரி , ராமனை கொல்ல அவனை தேடி புறபட்டான். ராமனின் வீட்டை நோக்கி தனது புல்லெட்ஐ செலுத்தினான். ராமனின் வீடு இருக்கும் தெருவை அடைந்தான். ராமனின் வருகைக்காக காத்திருந்தான் மாரி. மணி இப்போது 12:45, வாடிக்கையாக 1:00 மணிக்கெல்லாம் ராமன் தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக வருவதுண்டு, தனிக்கட்டை என்பதால் ஒரு பாட்டியை சமையளுக்காக வைத்துள்ளான். மதியம் உணவு உண்டு விட்டு அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது அவனது வழக்கம். ராமன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான் மாரி, ராமன் அவனது தெருவை அடைந்தவுடன் அவன் பின்னால் சென்ற மாரி அவனது தலையில் ஓங்கி அடித்தான், இதை சற்றும் எதிர்பாராத ராமன் சற்றே நிலை தடுமாறினான்.மாரி : "ஏன்டா நாயே பேணவும் பத்திரிக்கையும் இருந்துட்ட நீ என்ன வேணும்னாலும் எழுதுவியா ?. நீ இனிமே எப்படி எழுத போறேனு பார்க்கிறேன்" என்று அவனை அடித்து நைய புடைத்தான் , ராமனும் தன்னால் முடிந்த மட்டும் எதிர்த்து சண்டையிட்டு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டதே தவிர ஒருவராலும் தடுக்க முடியவில்லை... ராமன் நிலைகுலைந்து போனான். கூட்டத்தில இருந்த ரமனின் சமையல்கார பாட்டி "அட படு பாவி இப்படி போட்டு அடிக்கிறியே நீ நல்ல இறுப்பியா உன்னக்கெல்லாம் நல்ல சாவே வராது, உன்னை கொள்ளுரதுகுனு எவனாவது பொறந்து வருவான்" அதற்கு மாரி "யே கெழவி நீ என்ன இந்த நாய்க்கு வக்காலத்து வங்குற ஓடிடு இல்லேன்னா உன்னையும் போட்டு தள்ளிடுவேன் " என்று சொல்லிகொண்டே சிரித்த படி "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது" என்று தான் வைத்திருந்த கத்தியால் ராமனின் வயிற்றில் குத்தினான்.

தன் தலைவனுகேன்று இருந்த ஒரே எதிரியை அழித்து விட்டோம் என்ற இறுமாப்புடன் தன் வண்டியை மறந்தவாறு நடக்கலானான்... சாலையை கடக்க முற்படும்போது எதோ மரத்திலிருந்து சத்தம் கேட்டது இரண்டு அணில்கள் சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்த்தான். ஒரு பெரிய அணில் சிறிய அணிலை துரத்தியவாறு சண்டையிட்டு கொண்டிருந்தது, சிறிய அணில் தன்னால் முடித்த வரை ஈடு கொடுத்து போராடியது முடியவில்லை சோர்ந்து மரத்திலிருந்து கிழே விழுந்தது.மாரி அதை பார்த்து எக்காளமாய் சிரித்தான் . பெரிய அணில் சந்தோஷமாக நகர முற்பட்டபோது மேலிருந்து பறந்து வந்த கழுகு தன கால்களால் பெரிய அணிலை தூக்கிக்கொண்டு போனது. "படார்" என சத்தம் கேட்டது எதிரே வந்த கார் மாரியின் மீது மோதியது. மாரி அந்த இடத்திலேயே துடி துடிக்க ரத்த வெள்ளத்தில் இறந்து போனான்... "என்னை எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது"........ ஆம் இறந்த உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது ....

உன் உயிர் உனக்கு சொந்தமா ?

Thursday, April 23, 2009

use multiple application properites file?

How to use more than one ApplicationResources.properties in struts?

SCENARIO

The scenario is you have two properties files

1. one for English(For Example) - Application.Properties

1. one for Welsh(For Example) - Application_cy.Properties

The two jsp one is for english 1. lost.jsp

for Welsh 2. lost-cy.jsp

The change to be made in the

  1. web.xml 2. struts config.xml 3. lost-cy.jsp

web.xml

<servlet>

<init-param>

<param-name>applicationparam-name>

<param-value>/WEB-INF/classes/com/ips/ApplicationResources.properties>

>

<init-param>

<param-name>application1param-name>

<param-value>/WEB-INF/classes/com/ips/ApplicationResources_cy.properties>

>

servlet>

struts-config.xml

<message-resources parameter="com.ips.ApplicationResources" null="false"/>

<message-resources parameter="com.ips.ApplicationResources_cy" key="welsh" null="false" />

lost-cy.jsp

<html:errors bundle="welsh"/>

<html:form action="/lost-cy" method="post" onsubmit="return lostvalidate()">

<td class="border" align="left">

<html:text property="email" styleId="email" size="35">html:text>

<label class="error" id="emailerror"> <bean:message bundle="welsh" key="errors.email.required" />

label>

td>


Saturday, April 18, 2009

Messaging Exception In Java Mail

If you are getting an exception as below.
Exception in thread "main" javax.mail.MessagingException: Could not connect to SMTP host:
: port
The main reason behind this is the antivirus software(MCafee) which is blocking your port
you need to do the following to make your mail functionality work properly

This is the steps for McAfee
1. go to VirusScan Console
2. Double click Access Protection,in Access Protection tab you have to choose Anti-Virus Standard Protection Category
3. uncheck the Block of "Prevent mass mailing worms from sending mail".

Now you run your application its will works fine

Saturday, April 4, 2009

GENERATE KEYSTORE AND CONVERT INTO .cer File

GENERATE KEYSTORE AND CONVERT INTO .cer File

C:\>keytool -genkey -alias alias -keystore .keystore
Enter keystore password:
Re-enter new password:
What is your first and last name?
[Unknown]: rajesh
What is the name of your organizational unit?
[Unknown]: VIDYUT INFO SOLUTIONS PVT LTD
What is the name of your organization?
[Unknown]: VIDYUTINFO
What is the name of your City or Locality?
[Unknown]: chennai
What is the name of your State or Province?
[Unknown]: TN
What is the two-letter country code for this unit?
[Unknown]: IN
Is CN=vijitraj, OU=VIDYUT INFO SOLUTIONS PVT LTD, O=VIDYUTINFO, L=chennai, ST=TN
, C=IN correct?
[no]: yes

Enter key password for
(RETURN if same as keystore password):


To create a 1024-bit RSA key:
C:\>keytool -genkey -keyalg RSA -keysize 1024 -alias ali -keystore .keystore

Enter keystore password:
What is your first and last name?
[Unknown]: rajesh
What is the name of your organizational unit?
[Unknown]: VIDYUT INFO SOLUTIONS PVT LTD
What is the name of your organization?
[Unknown]: VIDYUTINFO
What is the name of your City or Locality?
[Unknown]: chennai
What is the name of your State or Province?
[Unknown]: TN
What is the two-letter country code for this unit?
[Unknown]: IN
Is CN=vijitraj, OU=VIDYUT INFO SOLUTIONS PVT LTD, O=VIDYUTINFO, L=chennai, ST=TN
, C=IN correct?
[no]: yes

Enter key password for
(RETURN if same as keystore password):


To create .cer file

C:\>keytool -storepass tomcat -keystore .keystore -alias ali -export -rfc -file raj.cer

cert file generated successfully

Thursday, April 2, 2009

நல்ல கருத்துகள்

ஆயிரம் உறவுகளை கொண்டவன் பெரியவன் அல்ல, ஆயிரம் உறவுகள் எதிர்த்தாலும் தன்னுடன் கடைசி வரை துணை நிற்க ஒரு உறவை கொண்டவன் - பெரியவன்

குடத்தில் உள்ள நீர், சிறு துளையால் வெற்றாக்க கூடும். அது போல உங்களின் சிறு கோபம் உண்மையான (அன்பான) உள்ளங்களை புண்ணாக்க கூடும்

Monday, March 30, 2009

பிச்சை பாத்திரம் - பிச்சை பாத்திரம்

பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வாள் வினை சூழ்ந்தததா
அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வாள் வினை சூழ்ந்தததா
இம்மையை நான் அறியாதாத்தா
இம்மையை நான் அறியாதாத்தா
சிறு பொம்மையின் நிலாயினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விதத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விதத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தா
புது வினயா பழ வினயா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தா
பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்ளட்டிர வாழ்க்கையும் தூரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அழைகின்ற மனம் இன்று பிதற்ருததே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை ஆரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போது சடை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

Wednesday, March 25, 2009

How to implement SSL in tomcat6 and java 6?

How to make SSL(https) for web application?

Software required
jdk 6
tomcat 6

Follow the steps
Firsth check classpath set for java and in bin keytool.exe is the generator of the following

for all the question you can give your own answers and also for password give whatever you wish

C:\Documents and Settings\Administrator>keytool -genkey -alias tomcat -keyalg RSA

for password i have given as changeit(you can give whatever you wish but its should be reflected in server.xml configuration given below)
Enter keystore password:
Re-enter new password:
What is your first and last name?
[Unknown]: rajesh
What is the name of your organizational unit?
[Unknown]: vidyut
What is the name of your organization?
[Unknown]: vidyut
What is the name of your City or Locality?
[Unknown]: chennai
What is the name of your State or Province?
[Unknown]: Tamilnadu
What is the two-letter country code for this unit?
[Unknown]: TN
Is CN=rajesh, OU=vidyut, O=vidyut, L=chennai, ST=Tamilnadu, C=TN correct?
[no]: yes

Enter key password for (<)tomcat(>)* *=(please remove ( ))
(RETURN if same as keystore password):
Re-enter new password:

for the (<)tomcat(>)* no need of pass just press enter

You need to write the following in server.xml
server.xml will be in conf directory of tomcat installation and keystoreFile location depends on where you put your keystore file

(opening html tag)Connector protocol="org.apache.coyote.http11.Http11Protocol"
port="8443" minSpareThreads="5" maxSpareThreads="75"
enableLookups="true" disableUploadTimeout="true"
acceptCount="100" maxThreads="200"
scheme="https" secure="true" SSLEnabled="true"
keystoreFile="C:/IPS/.metadata/.me_tcat/conf/.keystore" keystorePass="changeit"
clientAuth="false" sslProtocol="TLS"(closing html tag)

and disable the 8080 connector code.now you run your application you will get the url with https
if not try it with typing in browser itself.
if you get error like below




you need to do the following things

Secure connection Failed

1.click Or you can add an exception…

2 you will two buttons "get me out of here" and "add Exception"

3.click add exception

4. then click get certificate

5. click confirm security exception

Now everything will be fine

Thursday, January 8, 2009

கவிதையின் தொடரல் (குமுரல்கள்)

கர்ணன்....
1. கூடையிலே வந்தவனே ....
கோடி பல தந்தவனே.....
நல்லவரில் தூயவனே...
நட்பினில் நீ முதல்வனே...

கவசக்குந்தலத்தை கொண்டவனே...
பார் போற்றும் வல்லவனே...
துரியோதணானின் தோழனே...
கர்ணா.............

2008 இல் சில கொடுமைகள்
1. நாட்டில் நடக்கும் கொடுமைகள் கோடி... அன்று அதை தான் சொன்னான் பாரதி பாடி.... நாட்டில் உள்ளது ஆயிரம் நதிகள்... அதில்
கலந்து ஓடுது மக்களின் ரத்த துளிகள்....
பிறந்த நாடு என உயிர்விட்டவர் பலர் .. இன்று
பிறந்த நாள் என உயிர் எடுப்பவர் சிலர்...
பார் போற்றும் வல்லவர்கள் வாழ்ந்த நாட்டில்... இன்று
உயிர் அற்று போய் கிடைக்கிறார்கள் சுடுகாட்டில்...

சிந்தியுங்கள் செயல்படூங்கள்
1. இயற்கையின் சீற்றத்தை தடுப்பவர்கள் எவரும் இல்லை.... அதன் விழைவுகளை தடுப்பவர்களும் எவரும் இல்லை...மனிதனின் சீற்றம் அதனால் ஏற்படும் மாற்றம் .... இவைகளை கூடவே ஒன்றும் செய்ய இயலவில்லை ?அறைக்குள் உட்கார்ந்து கொண்டு உலக அமைதியாயை பேசுவோரால்.. சிந்திக்கத் தெரிந்தும் மனிதன் சிந்திப்பதில்லை.... காலத்தின் மாற்றங்களை முன்னேற்றங்களை சிதைக்கும் சக்திகளை....என்ன செய்ய போகிறார்கள் இந்த நாட்டை ஆள்பவர்கள்.....அரசியல் புள்ளிகளுக்கு கொடுக்கும் பாதுகப்பில்...பாதியை கூட மக்களுக்கு கொடுப்பதில்லை.... தாய் மண்ணாம் தாய் மடீயம் இந்தியாவின் பிள்ளைகளுக்குள்....என் இந்த பிரிவினை.... சிந்தியுங்கள் செயல்படூங்கள்... (சிந்திக்க தெரிந்தவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மூடன்).

மென்பொருள் நிறுவனத்தின் நிலை..(சத்யம்)
1. மென்பொருள் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல்...
பிஜ்ஜ கார்நர்யும், ஸ்பெந்ஸர் ப்லாஸவயும் நிரப்பியவர்கள்... இன்று சிற்றுண்டி அங்காடி நோக்கி போய் கொண்டிருக்கின்றார்கள்... தாழ்ந்தது இவர்கள் மட்டும் அல்ல இவர்கள் நிறுவனமும் தான்.... கிடைக்கும் பணத்தை செலவிட இடம் தேடுப்பவர்கள்..... இன்று வேலையை தக்க வைக்க வழி தேடுகிறார்கள்.... இனியாவது இவர்களால் மலையாய் போன விலைகள்..... குறையுமா என இவர்களே ஏங்கும் காலம் வந்துவிட்டது... சத்யம், சத்தியமில்லாமல் சத்தமில்லாமல்....

இன்று உண்மையில் நடந்தது.....(ஜனவரி 08 09)
1. அலுவலகம் செல்ல மனமில்லாமல் கிளம்பிய எனக்கு...
காலை உணவை மட்டுமே எண்ணத்தில் வைத்து...
வாகனத்தை செலுத்தியவன் இடையே குறுக்கிட்ட...
நாய்க்கு தீயவன் ஆனேன் வலியால் துடித்த அதனை..
பார்த்த மனம் பதைபதைத்து.... சாதாரண மனிதன்...
என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை....
ஆனால் உயரிய இடத்தில் இருப்பவர்களுக்கு....
என்னை போன்ற உணர்வுகள் தோன்றாமல் இருக்குமா......
நாட்டில் நடக்கும் கொடுமைகளை கண்டு...

ஹைக்கூ
1. காய்கறி கூடை சுங்கி பிஞ்சுகள் ....
ஷார் ட்டோவில் குழந்தைகள்...

2. சூரியன் மேற்கில் திப்பதில்லை...
அரசியல் வாக்குறிதிகள்

3.
சம்பளம் வரவில்லை ......
சிக்னலில் பிச்சைக்காரன்....

கனவு....
குழந்தையாய் தொட்டிலிலே நான்....

கனவு....

தொட்டிலிலே என் குழந்தை

வீரத்தமிழன் மரணம்

துயர் தன்னை வாட்டினாலும்...

தன் இனம் தன்னை காக்க இருக்கிறான்

ஒருவன் என்று...

நினைத்தவர்கள் வீதி இன்று ????

Tuesday, January 6, 2009

எனது கவிதைகள் (குமுரல்கள்)

மும்பை குண்டு வெடிப்பு ( தாஜ் ஹோட்டல் )
1. வர்த்தகத்துக்கு பெயற்ப்போனது...
இன்று தீவிரவாதிகளுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறது.....
பெயர் மட்டும் அல்ல போனது உயிரும் தான்...
"மும்பை" (இன்று "பைமும்")
தீவிரவாதிகள் ஏன் இழுக்கிறார்கள் நம்மிடம்
"வம்பை"......

அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம்
1. சட்டம் ஒரு இருட்டறை ... சட்டக் கல்லூரியும் இன்று இருட்டரையானது..... பட்டப்பகலில் வெட்டவெளியில் கல்லூரி கல்லரையாய் மாறியதை.. கண்டும் தடுக்க திரணியற்றவர்கள்...! பசுவிர்காக தன் மகனை கொன்ற .. மனுநீதி வாழ்ந்த வரலாற்றை பொய்யாக்கி போனதே...
2. சட்டம் பயிலும் இடத்தில்... குற்றம் பழகும் கொடூரம்... இதற்காகவா இவர்களை பெற்றார்கள்.... பத்து மாதம் சுமந்து...
வெட்கக்கேடு....... மிருகங்களை பெற்றததற்கு.....

இலங்கை போர்.. ஈழ தமிழன்...
1. இவர்கள் உடல் மட்டும் என்ன கல்லால் செய்ததா...
இவர்கள் உடலில் மட்டும் என்ன பாக்கையா (பாதரசம்) ஓடுகிறது....
யுத்தம் தன் சத்தத்தை உயர்த்தி கொண்டிருக்க...
இவர்கள் காதுகளில்(கண்களில்) மட்டும் ஏன் ஒ(ளி)லிக்க வில்லையாம்..
இந்த யுத்தத்தின் சுவடுக்களும், சிதறல்களும்.....
இலங்கை அரசே உன்னால் (நிலை) நிறுத்தமுடியாதது....
யுத்தத்தை மட்டும் அல்ல நாட்டையும் தான்...

2. யுத்தத்திலே வரும் சத்தத்திலே....
மொத்தத்திலே சிந்தும் ரத்தத்திலே..
பித்தத்திலே மனம் ஈழத்திலே....
வாழும் எங்கள் உயிர்களே...

3. யுத்தம் விடும் சத்தம்... அதனால்
நித்தம் விழும் ரத்தம் ... ஆனது
பித்தம் என தத்தம் .... வாழ்வை
தேடும் இந்த ஈழம்....

தீவிரவாதி..
1. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே... திருமூலர் .......................
உயிரை எடுத்தேன் என் உடல் வளர்தேனே... தீவிர(வாதி)மூடர் ..................